காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்


காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
x

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதபோல் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


Next Story