சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடைசி சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story