நாட்டு நலப்பணித் திட்ட முகாம்


நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
x

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

முகாமில் போதை விழிப்புணர்வு, நெகிழி விழிப்புணர்வு, சுற்றுச்சூழல், ஆகியவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌. படப்பை பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து முகாமின் நிறைவு விழா படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு சூற்றுச்சூழல், போதை விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினர். நாட்டு நலப்பணித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்து ஊக்குவித்தார். அப்போது மாணவர்கள் ஒன்றிய குழு கூட்டம் நடைபெறும் அரங்கை காண வேண்டுமென ஒன்றிய குழு தலைவரிடம் தெரிவித்தனர். உடனடியாக மாணவர்களை ஒன்றிய குழு கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு அழைத்துச் சென்று மாணவர்களின் ஆசையை நிறைவேற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், கண்ணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story