சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு


சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
x

வடக்கு பொய்கைநல்லூரில் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூர், காரைக்குளத்தெருவில் சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, யாக சாலை பூஜைகள், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story