தொடர்மழையால் நிரம்பிய சாஸ்தா கோவில் அணை


தொடர்மழையால் நிரம்பிய சாஸ்தா கோவில் அணை
x

தொடர்மழையினால் தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது.

விருதுநகர்

ராஜபாளையம்,

தொடர்மழையினால் தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது.

சாஸ்தா கோவில் அணை

ராஜபாளையம் அருகே தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. இந்த அணை 36 கன அடி கொள்ளளவு கொண்டது.

தற்போது பெய்த தொடர் மழையினால் இந்த அணை நிரம்பி வழிகிறது. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த அணை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டால் தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், இளந்திரை கொண்டான், முகவூர், கொல்லங்கொண்டான் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி அம்மையப்பன் கூறியதாவது:-

தொடர்மழையின் காரணமாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணையை பாசனத்திற்காக திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.


Related Tags :
Next Story