மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேருக்கு 20 ஆண்டு சிறை


மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; 2 பேருக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள மூலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). டெய்லர். இவருடைய நண்பர் கணேசன் (33).

இவர்கள் இருவரும் சேர்ந்து, மனநலம் பாதித்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கணேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story