கொழுந்தியாளுக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கொழுந்தியாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த 30 வயது வாலிபர் தனது மனைவியின் தங்கைக்கு 13.6.2022 அன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மனைவியின் தங்கை கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
Related Tags :
Next Story