சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் சிவன் கோவில் சந்திப்பில் இருந்து புறவழிச்சாலையை இணைக்கும் சாலையில் எம்.டி.ஆர். நகர், வசந்தம் நகர், ஜோதிபுரம் சந்திக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி கழிவு நீர் முறையாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story