புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் தீவிர வாகன சோதனை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது வழக்கு பதிவு


புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் தீவிர வாகன சோதனை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது வழக்கு பதிவு
x

சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

ஆங்கில புத்தாண்டு இரவு 12 மணிக்கு தொடங்கியது. 2023ம் ஆண்டை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினர். சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்ட்டனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 276 வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story