செந்தில் பாலாஜி மனு மீது 8ம் தேதி உத்தரவு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
பண பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்குகளில் புதிதாக ஆவணங்களை கேட்டும் சில விளக்கங்கள் கேட்டும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி புதிதாக மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூலை 8-ம்தேதி விசாரணை செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story