கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x

விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டு அமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி நிர்வாகி பொன் லட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story