கரூரில் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஜூடோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு:


கரூரில் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஜூடோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு:
x

சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள கரூரில் ஜூடோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.

கரூர்

ஜூடோ பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் கரூர் மாவட்டத்தில் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியின் தொடக்க நிலை ஜூடோ பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 1-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. விளையாடு இந்தியா கேலோ இந்தியா மையத்தில் குறைந்தது 30 மாணவர்கள், 30 மாணவிகள் பயிற்சியில் சேர்த்து அவர்களை மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச மற்றும் பன்னாட்டு அளவு மற்றும் ஒலிம்பிக் அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தயார் படுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் சேர்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 21-ந்தேதி அன்று காலை 9 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாத விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம்.

பயன்பெறலாம்

எனவே தாந்தோன்றிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் இத்தேர்வில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அதிக அளவில் கலந்து கொள்ள செய்து பயன்பெற செய்திட வேண்டும்.

மேலம் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரின் தொலைபேசி எண்.74017 03493-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story