சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது


சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
x

சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.

அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 80 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story