காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல்


காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல்
x

தக்கலை அருகே காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று காலையில் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் காருடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்த போது, சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் திருவிதாங்கோடு செட்டியார்விளையை சேர்ந்த செல்வின்(வயது47), திருவிதாங்கோடு கமலாபந்தி தெருவை சேர்ந்த மனோஜ் (31) என்பது தெரியவந்தது.

நாக்பூரில் இருந்து கடத்தல்

செல்வின் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, முப்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அர்ச்சனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மனைவியின் மூலம் கஞ்சா கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வின் ஊருக்கு வரும்போதெல்லாம் நாக்பூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நண்பரோடு சேர்ந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காரில் கடத்தி சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கார்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்

இதையடுத்து காரில் இருந்து மொத்தம் 4 கிலோ 477 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த ரூ.36 ஆயிரம் பணம், கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்ற ெசல்வின், மனோஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story