பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்துார் அருகே உள்ள ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ் (வயது 24). பெயிண்டர். இவரும், தென்காசி மாவட்டம் கடையநல்லுார் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் மாலா (23) என்பவரும் முகநூல் மூலம் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடையநல்லுாரில் உள்ள கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு கேட்டு திருப்பத்துார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாலா மேஜர் என்பதனாலும், அவர் காதல் கணவனுடன் செல்வதாக கூறியதாலும் போலீசார் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, மாலாவை காதல் கணவனுடன் அனுப்பி வைத்தனர்.


Next Story