2 பேருக்கு அரிவாள் வெட்டு


2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

திசையன்விளை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சுவிசேஷபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சாலமோன் (வயது 30). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கால்டுவெல் (50) என்பவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாலமோன், அவரது நண்பர்கள் ரமேஷ், சற்குணம் ஆகியோருடன் அங்குள்ள ஒரு பகுதியில் இரவில் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கால்டுவெல், அவர்கள் மீது டார்ச்லைட் அடித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கால்டுவெல், சாலமோனை அரிவாளால் வெட்டினார். அதை தடுத்த ரமேசுக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. காயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சாலமோன், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து கால்டுவெல்லை தேடி வருகிறார்.


Next Story