திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி


திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி
x

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி

திருவாரூர்


தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் தனிதிறமையை பார்வையிட்டு பாராட்டினார். கண்காட்சியில், மழை நீரை சேகரித்து தானாக வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சும் முறை, தொட்டியில் தண்ணீர் தேங்கினால் எச்சரிக்கை விடுக்கும் எந்திரம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நிலங்கள் பற்றியும், எாிமலை மாதிரி தோற்றம், சோலார் தெருவிளக்கு மாதிரி போன்றவை குறித்து மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சி படுத்தினர். திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், முதன்மை கல்வி அலுவலர் விஜயா, நகர் மன்ற உறுப்பினர் வாரை.பிரகாஷ் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story