பள்ளி மாணவன் மாயம்


பள்ளி மாணவன் மாயம்
x

பள்ளி மாணவன் மாயம் ஆனார்.

கரூர்

கரூர் வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் தினேஷ் (வயது 16). இவர் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் தினேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தினேசின் பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வழக்குப்பதிந்து, மாயமான தினேசை தேடி வருகின்றார்.


Next Story