பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை


பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
x

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம்

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022-ந்தேதி முதல் செயல்படுகிறது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022- தேதிக்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்.

கோப்புகள் சமர்பிக்க வேண்டும்

புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

அரசுஇணையதளம்https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-யிலும் இத்திட்டங்கள் குறித்தவிவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story