விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
x

அரூர் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் சம்பத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தர்மபுரி

அரூர்:

தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரூர் ஒன்றியம் மோப்பிரிப்பட்டி, வேடகட்டமடுவு, அக்ரஹாரம், சிட்லிங், கொங்கவேம்பு, செல்லம்பட்டி உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை, பனங்கன்று, துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு வகை விதைகள், பயிர் பாதுகாப்பு கருவிகள், கைத்தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினார். அதேபோன்று தோட்டக்கலைத்துறை சார்பில் குடியிருப்பு பகுதியில் தோட்டம் வைப்பதற்கு 125 தொகுப்புகளும், தோட்டக்கலை பயிருக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் மானியத்தொகையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story