Normal
மரக்கன்றுகள் நடும் விழா
கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கிராமங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் முழுமையாக நிறைவு செய்யவேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் சபான்கான், பணி மேற்பார்வையாளர் கலைவாணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஊராட்சி தலைவர் ரமேஷ்குமார், துணைத்தலைவர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story