தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை
தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை அஞ்சலக கண்காணிப்பாளர் சுப்பிரமணிய பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திர முதலீட்டு திட்டம் சிவகங்கை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வருகிற 6-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை கிடைக்கும். முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி தரப்படும். இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ5,611 ஆகும். முதலீடு செய்ய விரும்புவோர் சிவகங்கை தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி நாகலிங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story