சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது


சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது
x

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம்

ஜெயலலிதா பிறந்தநாள்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்புகளை வழங்கினர்,

இந்த நிகழ்ச்சியில், அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியம், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன், சேலம் மாநகர, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம், சரவணன், முருகன், பாலு, மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன், கவுன்சிலர் ஜனார்த்தனன் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

60 வார்டுகளிலும்

இதேபோல், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அந்தந்த பகுதி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


Next Story