பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை
x

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதற்கு அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 8 ஆயிரத்து 301 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பிடி ரக பருத்தி குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 479-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 689-க்கும் விற்பனையானது. இதனை அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். மொத்தம் ரூ.1 கோடியே 90 லட்சத்து 68 ஆயிரத்து 889-க்கு பருத்தி விற்பனையானது.


Next Story