பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

பெண்ணிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் செங்குளம் ரோட்டை சேர்ந்த சின்னான் மனைவி ஜெயலட்சுமி. கட்டிட காண்டிராக்டர். கரடிக்கல் கிராமத்தில் அரசு சார்பில் அமைக்கப்படும் வாருகால் பணியை எடுத்து வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணிகளை பார்வையிட்டு விட்டு மாலை 6 மணி அளவில் இவரிடம் பணிபுரியும் கொத்தனார் ஆலம்பட்டியைச் சேர்ந்த மயில் சாமியுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் வந்துள்ளார். கீழ உரப்பனூர் இந்திரா காலனி அருகே பின்னால் வந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயலட்சுமி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் நிலை தடுமாறி ஜெயலட்சுமி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story