வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்


வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்
x

வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்

மதுரை

மதுரை,

மதுரை பூந்தமல்லி நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 45).இவர் நரிமேடு பகுதியில் நடந்து சென்றபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டியது. தொடர்ந்து அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் பறித்து கொண்டு தப்பி விட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீபிகுளம் பிரவீன்குமார் (24), ஆலங்குளம் கண்ணன் (35), கொன்னவாயன் சாலை மருதுபாண்டியர் தெரு மாரிமுத்து (23), மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெரு சவுந்தரபாண்டியன் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அண்ணா மெயின் வீதியை சேர்ந்தவர் பழனிகுமார் (56). இவர் வைகை வடகரையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சென்றபோது 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மானகிரி மாரிமுத்து (23), காந்திநகரைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story