கத்தியை காட்டி வழிப்பறி: ரவுடி உள்பட 3 பேர் கைது


கத்தியை காட்டி வழிப்பறி: ரவுடி உள்பட 3 பேர் கைது
x

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 38). சம்பவத்தன்று இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்திைய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக திருச்சி வயலூர் சாலை சாந்தசீலாநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.200 மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மேலக்கொண்டையம்பேட்டையை சேர்ந்த சரவணக்குமாரிடம் (30), 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவானைக்காவலை சேர்ந்த பிரபல ரவுடி அருண்குமார் (20) மற்றும் லால்குடியை சேர்ந்த கோகுல் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,300 மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.


Next Story