தர்மபுரியில் தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணி தொடர்பாக சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story