கோவில்பட்டியில் சாலைமறியல்:பா.ம.க.வினர் 8 பேர் கைது


கோவில்பட்டியில் சாலைமறியல்:பா.ம.க.வினர் 8 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கடலூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி மெயின் ரோடு, இளையரசனேந்தல் ரோடு சந்திப்பில் நேற்று மாலை 3.30 மணி அளவில் அக்கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பு செயலாளர் காளிராஜ், நகர செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பு தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட 8 பா.ம.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.


Related Tags :
Next Story