பேனர் எரிப்பு; சாலைமறியல்


பேனர் எரிப்பு; சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:48 PM GMT)

பேனர் எரிக்கப்பட்டதால் சாலைமறியல் நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ளது பெருமச்சேரி ஊராட்சி. இங்குள்ள நாகநாதபுரம் பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென பரமக்குடி-நயினார்கோவில் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் இளையான்குடி தாசில்தார் அசோக்குமார் மற்றும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து பேனரை தீ வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story