சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கள்ளக்குறிச்சி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் பிரிவு சாலை சாமியார் மடம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமை தாங்கி சாலை விதிமுறைகளை மீறுபவர்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் சாலை விதிகளை மீறி வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு, வாகனங்களில் விதிமுறைகளை மீறி சென்றதால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான வீடியோ காட்சிகளை ஒளிப்பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.


Next Story