பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சாவூர்

பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் நடத்தின. பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர் கே.எஸ். அறிவழகன் தலைமை தாங்்கினார். மண்டலம் 13 உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சாலை பாதுகாப்பு சேர்மன் ஆர்.ரவிச்சந்திரன், ஆபிதீன் பள்ளி தாளாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் குழு தலைவர் சிவ.இ.சரவணன் வரவேற்று பேசினார். ஊர்வலத்தை பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது வாகனங்களில் செல்வோர் ஹெல்மேட் அவசியம் அணிவது குறித்தும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், பதாகைகள் ஏந்தியும், பள்ளி மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பி சென்றனர். தொடர்ந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பாபநாசம் வணிகர் சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி, பாபநாசம் அரிமா சங்கம் மற்றும் கிங்ஸ் அரிமா சங்கம் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர், இயக்குனர்கள், நிர்வாகிகள், உறுப்பினர், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் டி. சிலம்பரசன் நன்றி கூறினார்.


Next Story