துறையூர் நகராட்சி அலுலகம் அருகே பெண்கள் சாலை மறியல்


துறையூர் நகராட்சி அலுலகம் அருகே பெண்கள் சாலை மறியல்
x

துறையூர் நகராட்சி அலுலகம் அருகே பெண்கள் சாலை மறியலில் ஏற்பட்டது.

திருச்சி

துறையூர் 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தினர். ஆனால் இது தொடர்பாக நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. . இது பற்றி நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் கூறும்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து துறையூருக்கு வர வேண்டிய குடிநீர் வழியில் மின் துண்டிப்பு அடிக்கடி நிகழ்வதால் குடிநீர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை விரைவில் சீர் செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்கப்படும் என்றார்.


Next Story