அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சாலைமறியல்


அக்கரைப்பேட்டையை  சேர்ந்தவர்கள் சாலைமறியல்
x

அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சாலைமறியல்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை அருகே அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

நாகை தோணித்துறை ெரயில்வே கேட் அருகே அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதவாறு இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது அக்கரைப்பேட்டையில் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ஒரு பிரிவினர் துணைபோகின்றனர். இவ்வாறு துணைபோகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதுகுறித்து கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் நாகை முதலாவது கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story