தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்


தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x

தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அஜீஸ் நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது விழுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை நாய்கள் ஆங்காங்கே இழுத்துச் சென்று தெருவில் வீசி சென்று விடுகின்றன. எனவே இங்கு திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story