வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிதல் இயக்கம்


வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிதல் இயக்கம்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:47 PM GMT)

நீடாமங்கலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிதல் இயக்கம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டைகள் அணிதல் இயக்கம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை உடனே வழங்கிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சு வார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றினர்.


Next Story