திருவரங்குளம் அருகே அரசு பஸ்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் திடீர் மறியல்


திருவரங்குளம் அருகே அரசு பஸ்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் திடீர் மறியல்
x

திருவரங்குளம் அருகே அரசு பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அரசு பஸ்கள்

திருவரங்குளம் அருகே உள்ள வாண்டாகோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் அரசு பஸ்கள் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நீண்டகாலமாக நிறுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மறியல்

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வல்லத்திரா கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story