விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த மரநாய் மீட்பு


விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த மரநாய் மீட்பு
x

சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த மரநாய் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த மலைக்கோட்டலம் காப்புக்காட்டில் இருந்து மரநாய் ஒன்று வெளியேறி கனியாமூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த மரநாய் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராசு உத்தரவுபடி கச்சிராயப்பாளையம் பிரிவு வனவர் சின்னதுரை தலைமையில் வனக்காப்பாளர்கள் ஞானசேகர், மணிகண்டன், செல்வராஜ், அக்சயசாமி, வனக்காவலர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று வலை மூலம் அந்த மரநாயை பிடித்தனர். பின்னர் அதனை மலைக்கோட்டலம் காப்புக்காட்டில் கொண்டுவிட்டனர்.


Next Story