கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் கருமண்டபத்தை சேர்ந்த பிரகாஸ் என்பவருக்கு சொந்தமான காளை பங்கேற்றது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட அந்த காளை வெளியே சென்று ஓடியபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காளையை பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story