தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆடு மீட்பு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆடு மீட்பு
x

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் விஜயராணி. இவருக்கு சொந்தமான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அப்பகுதியில் உள்ளது. இந்த தொட்டியில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது ஆடு ஒன்று தவறி விழுந்தது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட அந்த தொட்டிக்குள் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தது. இருப்பினும் தொட்டிக்குள் இருந்து வெளியே வர முடியாமல் ஆடு தவித்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story