நெல் உலர் களம் அமைக்க கோரிக்கை


நெல் உலர் களம் அமைக்க கோரிக்கை
x

திருச்சுழியில் நெல் உலர் களம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக சிமெண்ட்டால் கதிரடிப்பு களம் அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் நெல் உள்ளிட்டவைகளை உலர்த்த பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் களத்தினை பராமரிக்காமல் போனதால் தற்போது அது குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வாறு பயன்பட்டு வந்த களம் தற்சமயம் கற்கள் பெயர்ந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. விவசாயிகள் களம் இல்லாமல் மண் தரையை சுத்தம் செய்து நெல் உள்ளிட்ட விளை பொருட்களை உலர்த்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். பயிர்களை உலர்த்த இடமில்லாமல் சிரமப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான கிராமங்களில் உலர் களம் இல்லாததால் சாலை ஓரங்களில் ஆபத்தான முறையில் தானியங்களை பிரித்தெடுக்கின்றனர். எனவே அனைத்து கிராமங்களிலும் விவசாய பணிகள் மேற்கொள்வதற்காக உலர் களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story