குளத்தை சீரமைக்க கோரிக்கை
குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், கண்ணப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட பழைய விராலிப்பட்டி பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் முளைத்துள்ள சீமைகருவேல மரங்களை சிலர் வெட்டி ஆங்காங்கே குவிந்து வைத்துள்ளனர். இதனால் கால்நடைகள் ஏரிக்குள் தீவனத்திற்காக அங்கும், இங்கும் அலைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீமைகருவேல மரங்களை அப்புறப்படுத்தி கால்நடைகளின் தீவனத்திற்கு ஏதாவது உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story