ஏற்கனவே நின்று சென்ற ெரயில்களை சோழவந்தானில் மீண்டும் நிறுத்த கோரிக்கை


ஏற்கனவே நின்று சென்ற ெரயில்களை சோழவந்தானில் மீண்டும் நிறுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2023 7:30 PM GMT (Updated: 14 Aug 2023 7:31 PM GMT)

ஏற்கனவே நின்று சென்ற ரெயில்களை சோழவந்தானில் மீண்டும் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் மற்றும் அதனை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை உள்பட பல்வேறு கிராமங்களுக்கு இப்பகுதி கிராம மக்கள் ெரயிலை பயன்படுத்தி வருகின்றனர். சோழவந்தான் ெரயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ெரயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதில் சில ெரயில்கள், ெரயில் நல சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் சோழவந்தானில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுபோக மீதமுள்ள நான்கு ெரயில்கள் சோழவந்தானில் நிறுத்துவதற்கு விக்கிரமங்கலம், முதலைக்குளம், சக்கரப்ப நாயக்கனூர், எவார்பட்டி, பானாமூப்பம்பட்டி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, மேலக்கால், திருவேடகம், தேனூர், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், ரிஷபம், சி.புதூர், சித்தாலங்குடி, திருவாளவாயநல்லூர், நெடுங்குளம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story