ெதருவிளக்குகளை சரி செய்ய கோரிக்கை


ெதருவிளக்குகளை சரி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2022 6:53 PM GMT (Updated: 29 Dec 2022 10:57 AM GMT)

ெதருவிளக்குகளை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள தெரு விளக்குகளில் ஒரு சில விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள் இருட்டான பகுதி வழியாக செல்வதற்கு மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story