நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை


நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை
x

வெம்பக்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் அவதி

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் உள்ளது. மதுரையில் இருந்து தாயில்பட்டி வழியாக விஜய்கரிசல்குளத்திற்கும், சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக விஜயகரிசல்குளத்திற்கும் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை. சாலை மோசமானதால் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், பசும்பொன் நகர், விஜயகரிசல்குளம், மேலகோதை நாச்சியார்புரம், சூரார்பட்டி, காமராஜர் காலனி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

பஸ்கள் இயக்க வேண்டும்

தற்போது சாலை புதுப்பிக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தும் பஸ் இயக்கப்படாமல் உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story