ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது
சிவகங்கை
சிவகங்கை,
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சியின் போது, அப்பள்ளியின் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.
இந்த செயலை தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story