ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை


ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?  பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் திருப்பாக்கோட்டை ஊராட்சி அய்யனார் கோவில் செல்லும் சாலையில் வயல்வெளிகளில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக வயல்களில் உழுவதற்கு செல்லும் டிராக்டர்கள் மீது உரசும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மழை மற்றும் காற்று காலங்களில் வயலுக்கு செல்லவே விவசாயிகள் அச்சப்படுகின்றனர். இது குறித்து அந்த ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் மற்றும் துணை தலைவர் ராஜா ஆகியோர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கூறினர். நாளுக்கு நாள் இந்த மின்கம்பம் சாய்ந்து கொண்டே செல்கிறது. எனவே, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story