ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்


ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 3 Aug 2022 4:56 PM GMT (Updated: 3 Aug 2022 5:04 PM GMT)

சங்கராபுரத்தில் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ராமர், வட்ட சார் ஆய்வாளர் ராதா, வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.


Next Story