உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x

2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்த சம்பவத்தில் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

பிரேத பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அருகே மாஞ்சான்விடுதியை சேர்ந்த குமாரின் மனைவி மாரிக்கண்ணு (வயது 34). இவர் தனது மகள்கள் கோபிகா (12), தாரணிகா (12) ஆகியோருடன் சேர்ந்து சித்தன்னவாசல் அருகே மலையடிப்பள்ளம் குளத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். 3 பேரின் உடல்களை அன்னவாசல் போலீசார் நேற்று முன்தினம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

சாலை மறியல்

இதையடுத்து அவர்களது உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க போலீசார் முயன்றனர். அப்போது அவர்கள் உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மாாிக்கண்ணுவிடம் கள்ளத்தொடர்பில் இருந்த நபரால் தான் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின் 3 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுச்சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பானது.


Next Story