வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி


வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி
x

சிவகாசியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை மண்டல முதன்மை மேலாளர் பியூலாஜான்சன், ஜேசீஸ் பள்ளி முதல்வர் சித்ராஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தேசிய நடுவர் ஸ்ரீதர் உள்பட 20-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டியை கண்காணித்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை பெற உள்ளனர்.



Next Story